• Jul 25 2025

நீங்கள் இங்கு படமெடுக்க விரும்பினால் சொல்லுங்கள்.. 'அவதார் 2' இயக்குநர் பேச்சால் திகைத்து நின்ற ராஜமவுலி.!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'ஆர்ஆர்ஆர்'. இத்திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதினை வென்று சாதனை படைத்தது. அதிலும் குறிப்பாக கோல்டன் குளோப் விருதில் ஒரிஜினல் பாடல் பிரிவில் சிறந்த பாடலாக 'நாட்டு நாட்டு' பாடல் விருது வென்றுள்ளது. 


மேலும் நாட்டு நாட்டு பாடலுக்கு இசையமைத்த எம்.எம். கீரவாணி நிகழ்ச்சி மேடையில் ஏறி மிகுந்த சந்தோசத்துடன் கோல்டன் குளோப் விருதை பெற்றுக்கொண்டார். அத்தோடு கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஆர்.ஆர்.ஆர். திரைப்பட டைரக்டர் ராஜமவுலி, நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி உள்பட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.


இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் ஹாலிவுட் திரைத்துறையின் முன்னணி டைரக்டரும் அவதார் திரைப்பட டைரக்டருமான ஜேம்ஸ் கேமரூனை ராஜமவுலி சந்தித்திருந்தார். இந்த சந்திப்பில் இரு டைரக்டர்களும் பல்வேறு தகவல்களை தங்களுக்குள் பரிமாறிக்கொண்டனர். 


அதுமட்டுமல்லாது இந்த சந்திப்பின்போது, நீங்கள் ஹாலிவுட்டில் படம் எடுக்க விரும்பினால் சொல்லுங்கள் நாம் அது குறித்து பேசுவோம் என்று ராஜமவுலியிடம் ஜேம்ஸ் கேமரூன் ஓபனாக கூறினார். இந்த வீடியோ ஆனது தற்போது சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement