• Jul 26 2025

இந்தவாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது போவது இவரா..வெளியானது தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் ஆறாம் சீசன்  கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி ஒளிபரப்பாகி பாதி நாட்களை கடந்துவிட்டது. ஆனால் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு பரபரப்பு இல்லாமல் போரடிக்கும் வகையில் தான் சென்றுகொண்டிருக்கிறது என ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

ஜிபி முத்து வீட்டுக்குள் இருந்த நேரத்தில் கிடைத்த வரவேற்பு சமீபத்திய வாரங்களில் கிடைக்கவில்லை என உறுதியாக கூறலாம். அதனால் அவரை மீண்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக கொண்டு வர வேண்டும் எனவும் ரசிகர்கள் கேட்டு வருகின்றார்கள்.

மேலும் அது ஒருபுறம் இருக்க தற்போது ராபர்ட் மாஸ்டர் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆகி வெளியேறியுள்ளார்.

இவ்வாறுஇருக்கையில்  இந்த வாரத்திற்கான நாமினேஷன் பிக் பாஸ் வீட்டில் நடந்து முடிந்திருக்கிறது. போட்டியாளர்கள் முகத்தில் கிரீம் பூசி ஓபன் நாமினேஷன் இடம்பெற்றது.

அதில் மைனா, ஜனனி, ரச்சிதா, குயின்சி, தனலட்சுமி மற்றும் கதிரவன் ஆகியோர் நாமினேட் ஆகி இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் இந்த பட்டியலில் கதிரவன் அல்லது குயின்சி ஆகியோரில் ஒருவர் தான் எலிமினேட் ஆக அதிக வாய்ப்பிருக்கிறது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement