• Jul 25 2025

ஸ்விக்கியில் வேலை செய்கின்றீர்களா என்று கேட்டது ஒரு குற்றமா?- ஷாருக்கான் வீட்டிற்கு உணவுடன் படையெடுத்த பிரபல நிறுவனம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் ஷாருகான். இவர் நடிப்பைத் தாண்டி சமூக வலைத்தளங்களிலும் ஆர்வமாக இருப்பவர்.அந்த வகையில் இவர் நேற்றைய தினம் ரசிகர்களுடன் கலந்து உரையாடினார்.அப்பொழுது ஒருவர் சாப்பிட்டாாச்சா பாய் என கேட்டார். அதற்கு ஷாருக்கானோ, ஏன் பாய் நீங்கள் ஸ்விக்கியில் வேலை செய்கிறீர்களா...நீங்கள் டெலிவர் செய்வீர்களா என ஜாலியாக கேட்டார். அந்த ட்வீட்டை பார்த்த ஸ்விக்கி நிறுவன ஆட்களோ, நாங்கள் ஸ்விக்கியை சேர்ந்தவர்கள். சாப்பாடு அனுப்பி வைக்கட்டுமா என கேட்டு ட்வீட் செய்தார்கள்.

சாப்பாடு வேண்டுமா என கேட்டு ஸ்விக்கியின் அதிகாரப்பூர்வ கணக்கில் இருந்து வந்த ட்வீட்டுக்கு ஷாருக்கான் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து 7 பேரிடம் சாப்பாடு கொடுத்து அனுப்பியது ஸ்விக்கி. ஷாருக்கானின் பங்களாவான மன்னத் முன்பு நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு, நாங்கள் ஸ்விக்கியில் இருந்து வந்திருக்கிறோம். உங்களுக்கு டின்னர் கொண்டு வந்திருக்கிறோம் என தெரிவித்தார்கள்.


ஸ்விக்கி செய்த செயலை பார்த்த ஷாருக்கான் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். கிங் கான் ஒரு ட்வீட் போட்டதற்கு ஸ்விக்கியில் இருந்து ஒரு படையே ஷாருக்கானின் வீட்டிற்கு வந்துவிட்டது. அவர்கள் கொண்டு வந்த சாப்பாட்டை ஷாருக்கான் சாப்பிட்டாரா என்பதை தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறது என ரசிகர்களும், சமூக வலைதளவாசிகளும் தெரிவித்துள்ளனர். 

ஷாருகான் தற்பொழுது அட்லி இயக்கத்தில் ஜவான் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருகின்றார்.இப்படம் செப்டெம்பர் மாதம் வெளியாகவுள்ளது.


ஜவான் பட வில்லன் பற்றி ஏதாவது சொல்லுங்களேன் என ரசிகர் ஒருவர் ஷாருக்கானிடம் நேற்று ட்விட்டரில் கேட்டார். அதற்கு அவரோ, விஜய்சேதுபதி அருமையான மனிதர். எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர். ஜவானில் அவர் ரொம்ப கூல் என பதில் அளித்தார். ஷாருக்கான் சொன்னது விஜய் சேதுபதி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.


Advertisement

Advertisement