• Jul 25 2025

விக்ரமன் கமல்ஹாசனை அண்ணா என்று அழைக்க இப்படி ஒரு காரணம் இருக்கிறதா?- இதுவரை தெரியாமல் போச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

 பின்னர் அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி உள்ளிட்டோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இதில் தற்போது 15 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 48-வது நாட்களை நெருங்கியுள்ளது. இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று கூறப்படுகின்றது.


இருப்பினும் நாளை தான் இது குறித்த சரியான தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.மேலும் இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராகக் கலந்து கொண்டிருப்பவர் தான் விக்ரமன். இவர் இந்த நிகழ்ச்சியினினைத் தொகுத்து வழங்கும் கமல்ஹாசனை அண்ணா என்று தான் அழைத்து வருகின்றார்.

அந்த வகையில் இவர் பிக்பாஸில் கலந்து கொள்ள முதல் கலந்து கொண்ட பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. இதில் தான் எல்லோரையும் அண்ணா தம்பி என்று அழைப்பதற்கு காரணம் என்ன என்று கூறியிருக்கிறார். அதாவது நான் வளர்ந்த சூழலில் இவ்வாறுதான் மற்றவர்களை அழைத்து பழகியுள்ளேன். சகோதர முறை சொல்லி அழைப்பது எனக்கு ரொம்ப பாதுகாப்பாகவும் இருக்கு நான் மினிஸ்டரைக் கூட அண்ணா என்று தான் அழைத்தேன் என்றும் அவர் அதில் கூறியதைக் காணலாம்.






Advertisement

Advertisement