• Jul 26 2025

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனி ஐஸ்வர்யாவாக நடிக்கப் போவது இந்த நடிகையா?- சாய் காயத்திரி சீரியலில் இருந்து விலகின்றாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மாத்திரம் அடிக்கடி கதாப்பாத்திரங்கள் மாறி வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே உள்ளது.

அந்த வகையில் முல்லை கதாப்பாத்திரத்தில் முதலில் விஜே சித்ரா நடித்து வந்தார். அவர் இறந்ததைத் தொடர்ந்து காவியா அறிவுமணி நடித்து வந்தார். தற்பொழுது அவரும் சீரியலில் இருந்து விலகியதால் பின்னர் அவரும் விலகியதால் தற்பொழுது லாவன்யா என்பவர் முல்லை என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.


இதே போல ஐஸ்வர்யா என்னும் கதாப்பாத்திரத்தில் முதலில் வைசாலினி என்பவர் நடித்தார் தொடர்ந்து விஜே தீபிகா நடித்து வந்தார்.பின்னர் விஜே தீபிகாவுக்கு முகத்தில் இருந்த பரு காரணமாக அவர் சீரியலில் இருந்து விலகினார். இதனால் சாய் காயத்திரி ஐஸ்வர்யாவாக கடந்த ஒரு வருடமாக நடித்து வந்தார்.


இப்படியான நிலையில் இந்த சீரியலில் இருந்து சாய் காயத்திரி விலகியுள்ளதாகவும் அவருக்கு பதிலாக விஜே தீபிகா தான் மீண்டும் என்ட்ரி கொடுக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இது குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement