• Jul 24 2025

இரண்டு கல்யாணம் பண்ணினால் இது தான் நிலமையா?- தலையில் துண்டை போட்ட கோபி- என்னதான் ஆச்சு?

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் கோபி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் சதீஷிற்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

இந்த சீரியல் டிஆர்பியிலும் நல்ல ரேட்டிங்கில் சென்று கொண்டிருக்கின்றது.விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாகவும் இது வருகின்றது.தற்போது இனியாவின் காதல் ட்ராக் ஒரு பக்கம், மற்றும் பாக்யாவின் கேட்டரிங் பிஸ்னஸ் ட்ராக் இன்னொரு பக்கம் என ஓடிக்கொண்டிருக்கிறது.


இந்நிலையில் தற்போது கோபி அவரது தலையில் துண்டை போட்டு பயந்து உட்கார்ந்து கொண்டிருப்பது போன்ற ஒரு போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.என்ன ஆனது என்பது இனி வரும் எபிசோடுகளில் தெரியும். 


மேலும் ராதிகா கோபியின் குடும்பம் கொடுக்கும் தொந்தரவுகளால் மன அழுத்தத்திற்குள்ளாகி இருப்பதோடு ஏன் தான் கல்யாணம் பண்ணினனோ எனக் குழப்பமான மனநிலையில் இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement