• Jul 25 2025

கரிகாலன் மேல் கேஸ் போட முடிவெடுக்கும் ஜனனி... ஆத்திரத்தில் ஆதிரை செய்த செயல்... பதறிப்போன ரேணுகா... சூடு பிடிக்கும் 'எதிர்நீச்சல்' ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் அதிகம் மக்கள் விரும்பிப் பார்க்கும் சீரியல் 'எதிர்நீச்சல்'. பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கும் எதிர் நீச்சல் தொடரின் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.


அதில் ஜனனி, அதிரை, ரேணுகா, நந்தினி ஆகியோர் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அப்போது ஜனனி "3ஆவது மனுஷர் கேஸ் போட்டிருந்தால் கூட இந்தக் கல்யாணம் செல்லாது" எனக் கூறுகின்றார். பதிவிற்கு நந்தினி "அப்போ அதை நாமளே போடுவோம்" என்கிறார்.

அதற்கு ஜனனி ஆதிரையின் முடிவு என்ன எனக் கேட்கின்றார். இதற்கு ஆதிரை "நான் முதலில் அருணைப் பார்க்கணும்" என்கிறார். அந்த சமயம் பார்த்து குணசேகரன், கரிகாலன் உள்ளே நுழைகின்றனர். அப்போது குணசேகரன் "ஏய் நந்தினி இன்னும் ஏற்பாடு பண்ணலயா" என்கிறார்.


அதெல்லாம் செய்ய முடியாது என்கிறார் நந்தினி. அத்தோடு கரிகாலனும் "அவங்க எல்லாம் கல்யாணம் ஆன நாளில் இருந்து இதைத்தான் சொல்லிட்டு இருக்காங்க" என்கிறார். மேலும் ஆதிரை "கரிகாலன் எனக்கு வேணாம்" எனக் கூறித் திருவுபலகையை கையில் எடுக்கின்றார்.உடனே ரேணுகா அதை பறிக்கின்றார். 


இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement