• Jul 25 2025

புதுத் திட்டம் தீட்டிய அப்பத்தா.. துணிச்சலுடன் பேசும் ஜனனி.. குணசேகரன் எடுக்கப் போகும் முடிவு.. ஆதிரை கல்யாணம் நடக்குமா..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலில் அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வகையில் விறுவிறுப்புடன் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அந்தவகையில் இதில் அரசு மற்றும் அருண் இருவரும் குணசேகரன் வீட்டுக்கு வந்து சொத்தில் ஆதிரை பங்கை எழுதிக் கொடுக்கும்படி சொல்ல குணசேகரன் அதிர்ச்சி அடையும் வகையில் அமைந்திருந்தது.

இந்நிலையில் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் அப்பத்தா "குணசேகரன் ஆடுற கேமை விட இந்த அரசு ஆடுற கேமை விட நான் ஆடுற கேம் ரொம்பப் பெரிதாக இருக்கும்" என ஜனனியிடம் கூறுகின்றார்.


அதன் பின்னர் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இருக்கும் நேரத்தில் "அவன் கேட்கிறது என்னோட 40% ஷேரை" என்கிறார் அப்பத்தா. அதற்கு குணசேகரன் "அந்த 40% ஐ அவனிட்டையே குடுத்திடலாம் என்கிறியா" எனக் கேட்கின்றார். இதனையடுத்து ஜனனி "நான் ஒண்ணு பேசலாமா" எனக் கேட்கின்றார்.


இவ்வாறாக இன்றைய ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது. அப்பத்தா என்ன திட்டம் தீட்டப் போகின்றார் என்பதையும், ஜனனி என்ன பேசப்போகின்றார் என்பதையும் சற்றுப் பொறுத்திருந்து எபிசோட்டின் மூலமாக தெரிந்து கொள்வோம்.  

Advertisement

Advertisement