• Jul 25 2025

மாப்பிள்ளை இவரா..? கோவிலில் கரிகாலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி... ஆதிரையை கூட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்த ஜனனி... இனி நடக்கப் போவது என்ன..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் ஆதிரையினுடைய திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ஆதிரை, கரிகாலன், நந்தினி, ஜனனி அனைவரும் கோவிலுக்கு வந்துள்ளனர். அப்போது சாமியார் "யார் பேருக்கு அர்ச்சனை" எனக் கேட்கின்றார். அதற்கு நந்தினி "ஆதிரை அருண்" என்கிறார். அதனைக் கேட்டதும் கரிகாலன் "எல்லாரும் சேர்ந்து என்னை ஏமாத்துறீங்களா" எனக் கேட்கின்றார்.


பின்னர் ரேணுகா கரிகாலனைக் கூப்பிட்டு "108 தரம் ஆதிரை கரிகாலன்" என்று சொல்லி கிட்டே இருக்குமாறு கூறுகின்றார். கரிகாலனும் கண்ணை மூடிக்கிட்டு சொல்லிக் கொண்டு இருக்கின்றார். 

அந்த சமயத்தில் ஜனனி, ரேணுகா, நந்தினி ஆகியோர் ஆதிரையைக் கூட்டிக் கொண்டு ஓடுகின்றனர். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. 


Advertisement

Advertisement