• Jul 24 2025

நான் நடிச்சதிலேயே பூமர் படம் என்றால் இது தான் என்னாலையே நம்ப முடில- வெளிப்படையாகப் பேசிய ஜெயம் ரவி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக ஜெயம் ரவி வலம் வந்து கொண்டிருக்கிறார். என்ன தான் அண்ணன், அப்பா உதவியால் திரைத்துறையில் அறிமுகமாகி இருந்தாலும் தனக்கென தனி பாதை வகுத்து, தற்போது கோலிவுட்டின் டாப் ஹீரோவாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

 இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய அகிலன் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. தொடர்ந்து இவர் கதாநாயகனாக நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம நாளைய தினம் (ஏப்ரல் 27) தேதி வெளியாகவுள்ளது. இதனால் படக்குழுவினர் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


இவர்களுடன் ஜெயம் ரவியும்  விதம்விதமான ஆடையணிந்து ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றார்.இப்படியான நிலையில் இவர் அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார். அதில் நீங்க நடிச்சதிலேயே பூமர் படம் எது என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய அவர் நான் எல்லாப் படத்திலேயும் கருத்து சொல்லியிருக்கிறேன். கருத்து சொன்ன எல்லாப்படமுமே பூமர் தான் என்று கூறினார்.


தொடர்ந்து நான் நோர்மலாத் தான் நடிச்சேன் ஆனால் அதை மக்கள் இப்படி கொண்டாடுறாங்களே என்று எந்த படத்தை சொல்லுவீங்க என்று கேட்ட போது அது ரோமியோ ஜுலியட் சொல்லுவேன். ஏன்னா அந்த படம் சிம்பிளாத் தான் நடிச்சேன் ஆனால் அதுக்கு மக்கள் மத்தியில் நல்ல ரெஸ்போன்ஸ் கிடைச்சிச்சு என்றும் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement