• Jul 25 2025

கால் பண்ணிய ஈஸ்வரிக்கு ஜீவானந்தம் கொடுத்த அதிர்ச்சி... அப்பத்தா ரூமிற்குள் நுழைந்த நபர்.. பதற்றத்தில் ஓடிய ஜனனி..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ஏனைய சீரியல்களை விடவும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை அடிக்கடி தூண்டிய வண்ணம் இருக்கின்றன.


இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் அப்பத்தாவை சுற்றி ஈஸ்வரி, ஜனனி எல்லோரும் நிற்கின்றனர். அந்த சமயத்தில் ஈஸ்வரி ஜீவனந்தத்திற்கு பரபரப்புடன் கால் பண்ணுகின்றார். ஆனால் ஜீவானந்தமோ 'பட்டம்மாள் சம்மந்தமாக எந்த நம்பர் வந்தாலும் எடுக்க வேணாம்" என காரில் இருந்தவரிடம் கூறுகின்றார். ஜீவானந்தம் ஆன்சர் பண்ணாமையினால் ஈஸ்வரி அதிர்ச்சி அடைகின்றார்.


மறுபுறம் 'சார் வீட்டில இருந்து அக்கவுண்ட்ஸ் எல்லாமே பாக்க சொன்னார்" என்று கூறி அப்பத்தா அறையில் நுழைந்தவரைப் பார்த்ததும் ரேணுகா "இந்தாள் மட்டும் எதுக்கு வீட்டுக்கு வந்து உட்கார்ந்திட்டு இருக்காரு, எனக்கு ஒண்ணும் சரியா படலையே' என்கிறார்.


இதனையடுத்து ஜனனி பதற்றத்துடன் அப்பத்தா ரூம் நோக்கி செல்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement