• Jul 25 2025

சண்டை போட்டுக் கொண்டிருந்த கதிரை தடுத்து நிறுத்திய ஜீவா- முல்லையைப் பார்த்து அழுத அவரது பெற்றோர்- குஷியில் இருக்கும் தனம்

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கதிர் முல்லையை மோட்டோர் சைக்கிளால் இடித்தவரை போட்டு அடிக்கின்றார். பின்னர் அவர் மீது கல்லைக் துாக்கிப் போடப் போக ஜீவாவந்து தடுத்து நிறுத்தி கதிரை இழுத்துக் கொண்டு போகின்றார்.இழுத்துக் கொண்டு போய் முல்லை அங்கே அப்பிடிக்கிடக்கு அந்த புள்ளைட முகத்தை கூட பார்க்காமல் அப்படி என்னடா கேவம் உனக்கு என்று திட்டுகின்றார்.


தப்பு பண்ணுற எல்லாருக்கும் தண்டனை கிடைக்கும் நீ யோசிக்காமல் வாடா என கதிரை தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்கின்றார். பின்னர் இருவரும் ஹாஸ்பிட்டலுக்கு வந்தவுடன் கதிர் டாக்டரைக் கேட்டு விட்டு முல்லையைச் சென்று பார்க்கிறார். அவரைத் தொடர்ந்து தனம் மூர்த்தி ஜீவா மீனா எல்லோரும் உள்ளே சென்று பார்க்கின்றனர்.

பின்னர் முல்லையின் அம்மா அப்பா உள்ளே சென்று பார்த்து விட்டு முல்லை பிறந்தபோது நடந்த விஷயத்தை சொல்லி கண்ணீர் வடித்து முல்லையை ஆறுதல்ப்படுத்துகின்றனர். தொடர்ந்து மூர்த்தியும் முல்லையின் அப்பா தனம் ஆகியோர் கோயிலில் முல்லையின் நேற்றிக்கடனை நிறைவேற்ற செல்கின்றனர்.


தனம் பூஜை செய்து விட்டு மிகவும் சந்தோஷத்துடன் மூர்த்தி தேங்காய் உடைக்கும் பக்கம் வந்து நிற்கிறார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement