• Jul 24 2025

கையெழுத்து போடச் சொல்லி அப்பத்தாவை வற்புறுத்தும் குணசேகரன்- ஜீவானந்தம் வீட்டில் நடக்கும் சண்டை- Ethirneechal - Promo

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன்டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஜீவானந்தத்தின் வீட்டைத் தேடி அடியாட்களுடன் கதிர் செல்கின்றார். மறுபுறம் ஜனனியும் செல்கின்றார். அப்போது ஜீவானந்தம் தன்னுடைய குழந்தையுடன் வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருக்கின்றார்.

மேலும் அப்பத்தாவிடம் சொத்தை தனக்கு தந்ததாக கையெழுத்து போடச் சொல்லி குணசேகரன் வற்புறுத்துகின்றார். அதற்கு அப்பத்தா நான் குணசேகரனைப் பார்த்தே ஆகவேண்டும் என்று சொல்கின்றார்.அத்தோடு கையெழுத்தை போட முடியாது என்றும் சொல்கிறார்.


மறுபுறம் ஜுவானந்தத்தின் வீட்டில் சண்டை பெரிதாக நடக்கின்றது. ஜனனியும் கதிருடன் போன அடியாட்களை அடிக்கின்றார்.அப்போது கதிர் துப்பாக்கியால் எடுத்து சுடுகின்றார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement