• Jul 25 2025

எல்லாமே ஜனனியின் சூழ்ச்சியா.. ஜாடை மாடையாகக் கூறும் கமல்... வெளியானது மாஸ் ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் ஆனது தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அது மட்டுமில்லாமல், தற்போது மிக முக்கியமான ஒரு கட்டத்தையும் இந்த நிகழ்ச்சியானது எட்டி உள்ளது. அதாவது சுமார் 60 நாட்கள் கடந்துள்ளது.

அதுமட்டுமல்லாது ஒவ்வொரு வாரமும் நடைபெறும் டாஸ்க் காரணமாக பிக்பாஸ் வீட்டில் ஏராளமான சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் கூட போட்டியாளர்கள் இடையே நடைபெற்று வருவதும் வழமையான ஒன்றாக மாறி விட்டது.

மேலும் இப்போட்டியிலிருந்து வாராவாரம் ஒருவர் வெளியேற்றப்பட்ட வண்ணமே இருக்கின்றார். அந்தவகையில் கடந்த வாரம் ஆயிஷா, ராம் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறுவார் எனப் பல ரசிகர்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள்.


இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய முதலாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் கமல் "நேர்மையாக, தீவிரமாக விளையாடியும் சில பேர் வெளியே இருக்கின்றார்கள். சில நேரம் நேர்மையான போராட்டங்களை சூழ்ச்சி வீழ்த்துகின்றது. ஆனால் சூழ்ச்சி எது, நேர்மை எது என்று பிரித்துப் பார்க்க வேண்டியது நம்ம கடமை இல்லையா..? பிரிச்சிடலாமா?" என மாஸாக கூறுகின்றார்.

இவ்வாறாக இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது. இதில் சூழ்ச்சி எனக் கமல் கூறுவது ஜனனியைப் போலவே இருக்கின்றது. எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ.!


Advertisement

Advertisement