• Jul 25 2025

பாரதியை சேரவிடாமல் பண்ணும் வெண்பா-தாறுமாறாய் கேள்வி கேட்கும் கண்ணம்மா-வெளியான வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா.இந்த சீரியலில் தற்பொழுது பாரதி தன்னுடைய மனைவி கண்ணம்மா என்று ஹேமா மற்றும் லக்ஷ்மி தன்னோட பிள்ளைகள் என்றும் ஏற்றுக் கொண்டு விட்டார்.

இந்நிலையில் குழந்தைகளுக்கு உண்மை தெரிந்துவிட்டது.இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரமோ வளியாகி உள்ளது.

அதில் கண்ணம்மா என்னை மன்னிச்சிடு..என பாரதி கூறி அவர்களுடன் சேர நினைக்கையில்..இவர்கள் இருவரையும் சேரவிடக்கூடாது என மனதில் எண்ணுகின்றார்.

அதன் பின்னர் பாரதி ஒரு நிமிசம் இந்த சிசல்ட் உண்மையாக இருக்க வாய்ப்பே இல்லை.உன்னை யாரோ ஏமாத்தி இருக்கிறாங்க..இரண்டு தடவையும் உனக்கு நெகட்டிவ் எண்டு தான் வந்தது.உனக்கு குழந்தை பெற்றுக்கொள்ளுவதற்கான தகுதியே இல்லை என பாரதியின் மனதை மாற்ற பார்க்கிறார் வெண்பா.

என்ன சேர் திருதிருவென முழிக்கிறீங்க..வெண்பா கேக்கிற கேள்வி ஞாயமாகத் தானே இருக்கு...அதற்கா பதிலை சொல்லுங்க சேர்..எனக் கூற இன்றைய ப்ரமோ முடிவடைகின்றது.அடுத்து என்ன நடக்கப்போகின்றது என ரசிகர்கள் பலரும் குழம்பி போயுள்ளனர்.




Advertisement

Advertisement