• Jul 25 2025

முகத்தடி கொடுத்த ரேணுகா... காலில் விழுந்த விசாலாட்சி... அதிர்ச்சியில் உறைந்த கதிர், குணசேகரன்... விறுவிறுப்பின் உச்சத்தில் 'எதிர்நீச்சல்'..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பல ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று எதிர் நீச்சல். இந்த சீரியலில் அடிக்கடி அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வண்ணமே இருக்கின்றன. அந்தவகையில் நேற்றைய தினம் ஜனனி குணசேகரன் வீட்டிற்கு போலீசை அழைத்து வந்திருந்தார்.

இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் குணசேகரன் "அது எப்படியம்மா இப்படி பச்சோந்தியாய் இருக்கீங்க எல்லாரும்" எனக் கேட்கின்றார். அதற்கு ரேணுகா "நீங்க இருக்கிற மாதிரித்தான் தான்" என நக்கலாக கூறுகின்றார். அதற்கு குணசேகரன் முறைத்துப் பார்க்கின்றார்.


மறுபுறம் ஆதிரை "எனக்கு இதுக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும்" எனக்கூறி அழுகின்றார். பின்னர் விசாலாட்சி சாருபாலாவிடம் "என் மகள் செய்த தப்பிற்கு நான் வேணும் என்றால் உங்க காலில் விழுகிறேன்" எனக் கூறி சாருபாலாவின் காலில் விழுகின்றார். அதனைப் பார்த்ததும் குணசேகரன் மற்றும் கதிர் அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றனர்.


Advertisement

Advertisement