• Jul 25 2025

நீ நல்லாவே இருக்க மாட்ட நாசமாகத் தான் போவ என பசுபதியைத் திட்டிய காவேரியின் அம்மா- உண்மை எல்லாம் உடையும் தருணம்

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் மகாநதி. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த சீரியல் தகப்பனை இழந்த 4 பெண் பிள்ளைகள் தம்முடைய வாழ்க்கையில் முன்னேற என்னவெல்லாம் செய்யப் போகின்றார்கள் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

இந்த நிலையில் கங்காவுக்கு யாருடன் திருமணம் நடக்கப் போகின்றது என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் குமரனுக்கும் கங்காவுக்கும் திருமணம் நடந்து முடிந்து விட்டது. குமரன் கங்காவைத் திருமணம் செய்தது குமரனின் அம்மாவுக்கு பிடிக்கவே இல்லை.


இப்படியான நிலையில் பசுபதி தங்களுடைய தோட்டத்தை அபகரித்து விட்ட விடயம் காவுரிக்கு தெரிந்து விட்டது. இப்படியான நிலையில் பசுபதி தோட்டத்திற்கு பூஜை போட்டுக் கொண்டிருக்கும் போது காவேரி ஆதாரத்துடன் சென்று தனது அம்மாவுக்கு பசுபதியின் சுயரூபத்தை காட்டுகின்றார்.

இதை பார்த்த காவேரியின் அம்மா பசுபதியைத் திட்டுகின்றார்.இது குறித்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement