• Jul 24 2025

கோலங்கள் 2 கதை ரெடி; தேவயானியை அருகில் வைத்துக்கொண்டு இயக்குநர் திருச்செல்வம் சொன்ன மகிழ்ச்சிச் செய்தி!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

கோலங்கள் சீரியல் குறித்து இயக்குநர் திருச்செல்வம் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. சின்னத்திரை சீரியல் இயக்குநர்களில் மிகவும் பிரபலமான இயக்குநராக திகழ்பவர் திருச்செல்வம். இவர் ஆரம்பத்தில் டப்பிங் தியேட்டரிலும், இளையராஜா மியூசிக் கம்போஸ் செய்யும் ஒலிப்பதிவு கூடத்திலும் பணிபுரிந்து இருந்தார். 

பின் தமிழ், மலையாளம், இந்தி என்று பல மொழிகளில் தயாரான நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றினார். அதற்குப் பிறகு தான் இவர் சின்னத்திரையில் சீரியல்களை இயக்கும் பணியில் இறங்கினார்.

இவர் முதன் முதலாக 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த மெட்டி ஒலி என்ற தொடரில் இணை இயக்குநராக பணியாற்றினார். அந்த தொடரில் மூலம் திருச்செல்வம் நடிகராகவும் அறிமுகமானார். அதற்கு பிறகு இவர் கோலங்கள் என்ற தொடரை இயக்கி சின்னத்திரை இயக்குநராக மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இந்த தொடர் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. தற்போது இவர் சன் டிவியில் எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கி வருகிறார்.

சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில்  ''கோலங்கள் 2 எதிர்பாக்கலாமா''? என்ற கேள்விக்கு,  கோலங்கள் 2 கண்டிப்பா வரும்,அதுக்கான கதையெல்லம் ரெடி பண்ணி வைச்சிட்டன்காலம் கனிந்தால் கண்டிப்பா சன் டிவியிலேயே வரும். சன் டிவியில் மட்டும் தான் வரும் என கூறினார். அந்த பேட்டியில் கோலங்கள் சீரியலின் நடிகை தேவயானியும் ,கற்பகமும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement