• Jul 25 2025

'PS 2' இல் இருந்து வெளிவந்த குந்தவையின் புதிய புகைப்படம்... வாவ் திரிஷாவா இது... இப்படி இருக்காங்களே..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படமே 'பொன்னியின் செல்வன்'. இவரின் கனவு திரைப்படமான இப்படமானது செப்டெம்பர் 30-ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடி இருக்கின்றது.


திரைப்பிரபலங்கள் பலரும் நடித்துள்ள இப்படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக த்ரிஷாவும், ஆதித்த கரிகாலனாக சியான் விக்ரமும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், பெரிய பழுவேட்டயராக சரத்குமாரும், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமியும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜும், ஆழ்வார்கடியான் நம்பியாக ஜெயராமும் நடித்து அசத்தியிருந்தனர்.


மிகப்பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான இப்படமானது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு, மற்றும் சிறந்த விமர்சனங்களும் கிடைத்த நிலையில் வசூலிலும் மாஸ் காட்டி சாதனை நிகழ்த்தி இருந்தது.


பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் குந்தவை திரிஷா காட்சியின் புகைப்படம் ஒரு தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இதோ அந்த புகைப்படம்..!


Advertisement

Advertisement