• Jul 25 2025

ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்த லியோ படக்குழு- புகைப்படத்துடன் லோகேஷ் வெளியிட்ட அறிவிப்பு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தளபதி விஜய்யை வைத்து 'லியோ' படத்தை இயக்கி வருகின்றார் லோகேஷ் கனகராஜ். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் சுமார் 50 நாட்களுக்கு மேல் எடுக்கப்பட்டது. இதில் லியோ படத்தில் விஜய்க்கு கதாநாயகியாக நடித்து வரும் திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், ஆக்சன் கிங் அர்ஜூன், கதிர், ஜனனி, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பல்வேறு இடங்களில் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு எடுக்கப்பட்ட நிலையில், இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோ ஒன்றில் பிரம்மாண்ட செட் போட்டு எடுக்கப்பட்டு வந்தது. கடந்த வாரம் விஜய் தன்னுடைய படப்பிடிப்பை முடித்து விட்டார் என, விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இயக்குநர் அறிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, இன்னும் சில தினங்களில் 'லியோ' படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைய உள்ளதாகவும் தகவல் வெளியானது.


இந்நிலையில் 'லியோ' படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும், முடிவடைந்து விட்டதாக  இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய குழுவினருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

 125 நாட்கள், 6 மாதம் என்னுடன் இந்த படத்தில் முழுமனதுடன் பணியாற்றிய தன்னுடைய குழுவினருக்கு நன்றி என உணர்வு பூர்வமாக பதிவிட்டுள்ளார் . இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் உருவாகி உள்ள 'லியோ' திரைப்படம் அக்டோபர் மாதம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement