• Jul 24 2025

வேறொரு பெண்ணுடன் கவினுக்கு கல்யாணம்... காதலை மறக்க முடியாமல் லாஸ்லியா வெளியிட்ட பதிவு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

'சரவணன் மீனாட்சி' சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் கவின். சீரியல்களில் நடித்து வந்த கவின் ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாகவும் அறிமுகமானார்.

இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்காவிட்டாலும் லிப்ட், டாடா படத்தின் மூலம் மென்மேலும் பிரபலமானார். அதுமட்டுமல்லாது கவின் 2019-ஆம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கவின் பங்கேற்றிருந்தார்.


அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான லாஸ்லியாவுடன் கவினுக்கு காதல் ஏற்பட்டது. ஆனால் அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதும் இருவரும் பிரிந்து கொண்டார்கள். 


 இந்த நிலையில் கவினுக்கு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி மோனிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகும் முன்னரே கவினுக்கு மோனிகாவுடன் காதல் இருந்துள்ளமை தற்போது தெரிய வந்துள்ளது. 


இவ்வாறாக கல்யாண அறிவிப்பிற்கு மத்தியில் லாஸ்லியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நாடிக்கு கை கொடுத்தவாறு ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருக்கும் தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, அதன் பின்னணியில் ஆயுத எழுத்து படத்தில் இடம்பெறும் ‘நெஞ்சமெல்லாம் காதல்’ என்கிற பாடலை ஒலிக்கவிட்டுள்ளார். 


இதனைப் பார்த்த ரசிகர்கள் கவினின் திருமண அறிவிப்பைக் கேள்விப்பட்டதால் தான் லாஸ்லியா இப்படி ஒரு ஸ்டோரியினை பதிவிட்டுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாது லாஸ்லியா வெளியிட்டுள்ள புகைப்படங்களிற்கு கீழேயும் ரசிகர்கள் கவின் பற்றிய கமெண்டுகளையே அதிகம் குவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement