• Jul 24 2025

கோடி ரூபாய் கொடுத்து நடிக்க சொன்னாலும் மனோபாலா அந்த சீன்ல நடிக்க மாட்டாராம்- வீக்னஸ் இது தானா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழில் உள்ள நகைச்சுவை நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் மனோபாலா. இயக்குநர் பாரதி ராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்து படம் எடுக்க கற்றுக்கொண்டவர் மனோபாலா. ஆனால் இயக்குநராக தமிழ் சினிமாவில் அவரால் பெரிதாக சாதிக்க முடியவில்லை.

எனவே நகைச்சுவை நடிகராக  களம் இறங்கினார். உடல் பாவனையிலேயே நகைச்சுவை காட்ட கூடியவர்கள்தான் வெகு காலமாக சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரமாக இருந்துள்ளனர். அப்படி இருந்த நடிகர்களில் மனோபாலாவும் முக்கியமானவர்.


அவரது மறைவிற்கு பிறகு அவரை பற்றிய பல தகவல்களை பார்க்க முடிகிறது. முன்பு ஒரு பேட்டியில் அவர் பேசும்போது சினிமா குறித்து பல தகவல்களை பகிர்ந்திருந்தார். அப்போது சந்தான பாரதி, கமல்ஹாசன், எஸ்.வி சேகர் என பலரும் ஆழ்வார் பேட்டையில் ஒன்று கூடி திரைப்படங்கள் பற்றி பேசி வருவது வழக்கம்.


அப்போதெல்லாம் அவர்கள் வளர்ந்த நடிகர்களாக இருக்கவில்லை. மனோபாலாவை அவருக்கு கரப்பான் பூச்சி மற்றும் பாம்பை கண்டால் பயம். கோடி ரூபாய் கொடுத்து நடிக்க சொன்னாலும் அந்த காட்சியில் கரப்பான் பூச்சி, பாம்பு இருக்கும் என்றால் அவர் நடிக்க மாட்டார். அந்த பேட்டியில் இந்த விஷயத்தை அவர் பகிர்ந்திருந்தார்.


Advertisement

Advertisement