• Jul 25 2025

ஜெயிலில் கண்ணன்... குழந்தை பெற்ற ஐஸ்வர்யா.. கண்கலங்கிய குடும்பம்... ஆறுதல் சொன்ன மூர்த்தி... 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ப்ரோமோ வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் அடிக்கடி அதிரடித் திருப்பங்களும் நிகழ்ந்த வண்ணம் தான் இருக்கின்றன. இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.


அதில் ஐஸ்வர்யா கதிரிடம் "மாமா கண்ணனைக் கூட்டிற்று வரலயா?" எனக் கேட்கின்றார். அதற்கு கதிர் "அவன் மேஜை டாயரில் இருந்து தான் பணத்தை எடுத்திருக்காங்களாம்" என்கிறார். அத்தோடு மூர்த்தி "கண்ணன் யார் கிட்டேயோ இருந்து தான் வாங்கியிருக்கான் இப்பிடியே ஜெயிலில் கிடக்கட்டும்" எனக் கூறி தனத்திடம் கத்துகின்றார்.


அந்த சமயத்தில் ஐஸ்வர்யாவிற்கு வயிற்று வலி வருகின்றது. உடனே ஹாஸ்ப்பிட்டலிற்கு கொண்டு செல்கின்றனர். அப்போது ஐஸ்வர்யாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என டாக்டர் கூறுகின்றார். இதனைக் கேட்டதும் அனைவரும் சந்தோசப்படுகின்றனர்.  


பின்னர் "அவன் பண்ணினது பெரிய தப்பு தான் மாமா எங்கள மன்னிச்சிடுங்க" என் ஐஷு மூர்த்தியிடம் கூறுகின்றார். பதிலிற்கு மூர்த்தி "அவன் பண்ணின தப்புக்கு நீங்க என்னம்மா பண்ணுவீங்க" என்கிறார். அத்தோடு "உன்னையும் குழந்தையையும் பத்திரமாக பார்த்திருக்க வேண்டியது என் பொறுப்பு" என்கிறார்.


Advertisement

Advertisement