• Jul 25 2025

கண்ணனுக்கு மூர்த்தி கொடுத்த பதிலடி- கயல் விஷயத்தில் மாமனாரிடம் கோபப்பட்டு கத்திய ஜீவா- தனத்தை அவமானப்படுத்திய முல்லையின் அம்மா-

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கண்ணனை சந்தித்த மூர்த்தி ஜீவா தான் உன்ரன சின்ன வயசில இருந்து படிக்க வச்சான். இப்போ கல்யாணம் பண்ணிட்டு அவன் கிட்டையே காசுக்கு போய் நிக்கிற. உனக்கு பணம் அதிகமா வேணும் என்றால் இன்னொரு வேலைக்கு போ.இன்னொருத்தனுடைய குடும்பத்தை அழிக்காதீங்க. இதுக்கு மேல கதிர் கிட்ட பணம் கேட்டால் நல்லா இருக்காது என்று சொல்கின்றார்.


பின்பு தனமும் முல்லையும் ஒரே ரூமில் படுப்பதைப் பார்த்த முல்லையின் அம்மா கோபப்படுகின்றார். அத்தோடு மாப்பிள்ளை ரூமுக்குள்ள படுக்கிறதில்லையா நீ எதுக்கு இவ கூட தனியாக படுக்கணும் என்று கேட்க முல்லை அக்கா இங்க தான் படுப்பா நீ சும்மா இரு என்று சொல்லி சமாளித்து விடுகின்றார்.

தொடர்ந்து ஜீவா வீட்டில் எல்லோரும் இருந்து பேசிட்டு இருக்கும் போது கயல் என்ற பெயர் பழைய பெயராக இருக்கு அந்தப் பெயரை மாத்திடலாம் என்று ஜீவாவின் மாமனார் சொல்ல அதற்கு மீனாவும் ஓகே சொல்கின்றார். இதனால் கோபமடைந்த ஜீவா இதெல்லாம் வேணாம் கயல் என்ற பெயரே நல்லா இருக்கு அதை மாற்ற வேணாம் என்று கோபப்படுகின்றார்.


பின்பு இது சும்மா பேசியதாக ஜீவாவை மீனா சமாளிக்கின்றார். பின்னர் தனம் கிச்சனில் இருக்க முல்லையின் அம்மா இது முல்லையோட வீடு தானே அவ ரூமில நீ எதுக்கு இருக்கிற ஒரு வீட்டில இரண்டு புள்ளைத்தாச்சி பொண்ணுங்க இருக்க கூடாது நீ எங்க அம்மா வீட்டுக்கு போய்டு என்று சொல்ல தனம் கவலைப்படுகின்றார்.

பின்னர் மூர்த்திக்காக எல்லோரும் காத்திருகக தனம் கதிரையும் முல்லையையும் உள்ள போய் படுக்க சொல்கின்றார். இதனால் கதிரும் மல்லையும் அதிர்ச்சியடைகின்றனர். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement