• Jul 25 2025

கதிரை மட்டும் புகழ்ந்து தள்ளிய மூர்த்தி- தான் கஷ்டப்பட்டதை நினைத்து பார்க்கும் ஜுவா

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம். வீட்டுக்கு வந்த மீனாவின் அம்மாவிடம் தனம், முல்லை ,ஐஸ்வர்யா ஆகியோர் இருந்து கதைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மீனா மட்டும் உள்ளே வேலை இருக்கு என்று கிளம்பி விடுகின்றார்.

தொடர்ந்து மீனாவின் அம்மா உள்ளே சென்று மீனாக்கு அட்வைஸ்ட் பண்ணுகின்றார். அத்தோடு கயல் பாப்பாவைக் கொண்ட போய் தான் வளர்க்கட்டுமா என்று கேட்கிறார்.ஆனால் அதற்கு மீனா மறுத்ததால் அவர் மீனாவைத்திட்டி விட்டு சென்று விடுகின்றார்.தொடர்ந்து எல்லோரும் இருந்து பேசிட்டு இருக்கும் போது கதிர் வருகின்றார்.


கதிர் வருவதைப் பார்த்தவுடன் மூர்த்தி கதிர் தனியாகக் கஷ்டப்படுகின்றான் என்று புகழ்ந்து பேச ஜுவா தானும் தனியாக கஷ்டப்பட்டதை நினைத்துப் பார்க்கின்றார்.தொடர்ந்து மீனாவும் ஜுவா தன்னிடம் சொன்னதை நினைத்து பார்த்துக் கொண்டிருக்கின்றார்.


பின்னர் மீனாவின் அம்மா,தன்னுடைய வீட்டிற்குச் சென்று கணவரிடம் மீனா கஷ்டப்படுவதைப் பற்றி சொல்கின்றார். தொடர்ந்து கதிரும் வெங்கட்டும் தம்முடைய கடையில் நடந்த விடயங்களைப் பற்றி கூறுகின்றனர்.இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement