• Jul 25 2025

சுந்தரிக்கு குழந்தை பிறக்காது என்று ரிப்போட் கொடுத்த ஹாஸ்பிட்டலுக்கே நேராகச் சென்ற முருகன்- பதற்றத்தில் கார்த்திக்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கனவுகளை அடைய எப்பிடியெல்லாம் முயற்சிக்கின்றார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

அதிலும் கணவன் கார்த்தி அனு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதோடு சுந்தரியை ஏமாற்றி விட்டார் என்ற விடயம் கொஞ்சம் கொஞ்சமாக சுந்தரி குடும்பத்திற்கு தெரிய வந்து விட்டது. இருப்பினும் சுந்தரியின் மாமாவுக்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் தான் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.


மேலும் சுந்தரிக்கு குழந்தை பிறக்காது என்று சொன்ன விஸயம் பொய் என்று அனு கண்டு பிடித்து அதனை சுந்தரியிடம் சொல்வி விட்டார். இதனால் சுந்தரியின் அம்மா கார்த்திக்கின் சட்டையை பிடித்து கேள்வி கேட்கும் போது சுந்தரியின் அம்மாவுக்கு பேச்சும் வந்து விட்டது.

சுந்தரி நிறைய பேர் முன்னாடி வைத்து கார்த்திக்கை அறை விட்டதால் கார்த்திக்கின் அக்கா கடும் சோகத்தில் இருக்கின்றார்.இப்படியான நிலையில் சுந்தரிக்கு பொய்யான ரிப்போட் வழங்கிய ஹாஸ்பிட்டலுக்கு நேராகச் சென்று விசாரிக்கின்றார். இந்த விடயம் கார்த்திக்கிற்கு தெரிந்ததால் அவர் அதிர்ச்சியடைந்து ஓடி வருகின்றார்.இது குறித்த ப்ரோமோ தற்பொழுது வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement