• Jul 26 2025

இறுக்கமான உடையணியுமாறு கூறி... என் கணவரும் மாமியாரும் என்னை ஓங்கி அறைந்தார்கள்.. கண்கலங்கிய பிரபல நடிகை..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை கரீனா கபூர். இவரின் சகோதரி தான் கரிஷ்மா கபூர். இவரும் பிரபல நடிகை ஆவார். கரிஷ்மா கபூரின் குடும்ப வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் இவர் ஒரு தொழில் அதிபரை திருமணம் செய்து சில ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து செய்து பிரிந்தார். 


இருப்பினும் இவர்களுக்கு சமீரா, கியாரா ராஜ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவர், மாமியார் மீது கரிஷ்மா கபூர் வரதட்சணை வழக்கு ஒன்றினையும் முன்னர் தொடர்ந்திருந்தார்.


இந்நிலையில் தற்போது அந்த வேதனையான சம்பவங்களை நினைவுப்படுத்தி கரிஷ்மா கபூர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அப்பேட்டியில், "திருமணத்திற்கு முன்பு எனது மாமியார் பரிசாக ஒரு உடையை வாங்கிக் கொடுத்தார். 


எனக்கு ஒரு மகன் பிறந்த பிறகு கொஞ்சம் குண்டாகி விட்டேன். அப்போது என் மாமியார் பரிசாக அளித்த உடையை என் கணவர் அணிய சொன்னார். அந்த உடை எனக்கு ரொம்பவே இறுக்கமாக இருக்கிறது. அணிய முடியாது என்றேன். உடனே என்னை அவர் ஓங்கி அறைந்தார். என் மாமியாரையும் அழைத்து என்னை அறைய சொன்னார். இப்படி எத்தனையோ பிரச்சினைகள் என் வாழ்வில் இடம்பெற்றது. இதன் நடுவில்தான் எங்கள் விவாகரத்து நடந்தது'' என்று கண்கலங்கியவாறு கூறியிருக்கின்றார்.

Advertisement

Advertisement