• Jul 25 2025

நயன்தாராவால் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து விலகிய சிம்பு- ஓவர் சீன் போட்ட விக்ரம் மற்றும் ஜெயம்ரவி

stella / 3 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்கள்களால் பெருதும் எதிர்பார்க்கப்பட்ட படமாக இருப்பது பொன்னியின் செல்வனாகும். இத்திரைப்படத்தின் ரிலீஸிற்காக அனைத்து ரசிகர்களும் காத்திருக்கின்றனர். இப்படத்தை இயக்குநர் மணிரத்னம் பிரமாண்ட முறையில் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், குந்தவையாக திரிஷாவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் நடித்துள்ளனர். இவர்களது கேரக்டர் அடங்கிய போஸ்டர்கள் மற்றும் இப்படத்தின் டீசர் ஆகியவை சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இப்படத்தின் முதல் பாகம் செம்ரெம்பர் மாதம் 30ம் திகதி வெளியாகும் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் புதிய தகவல் ஒன்று வைரலாகி வருகின்றது. அதாவது இப்படத்தில் நடிப்பதற்கு மணிரத்னம் சிம்புவிடமும் கேட்டிருந்தாராம்.

சிம்புவும் இதற்கு ஓகே சொல்லியிருந்த நிலையில் நயன்தாராவும் இப்படத்தில் நடிக்க கமிட்டாகி இருந்தாராம்.ஆனால் சிம்பு நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என்று கூறிய காரணத்தால் சிம்பு நடிக்க வரவில்லை என்று கூறினாராம். அதே போல சிம்பு நடித்தால் நாங்களும் நடிக்கமாட்டோம் என விக்ரம் மற்றும் ஜெயம்ரவியும் கூறி விட்டாராம். இதனால் தான் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து சிம்பு விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement