• Jul 25 2025

பாக்கியாவை வார்த்தைகளால் காயப்படுத்திய இனியா... வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலானது பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அதில் தற்போது  பிளஸ் டூ பரீட்சையில் ஸ்கூல் பெர்ஸ்ட் வந்த இனியாவுக்கு ஸ்கூலில் பாராட்டு விழா நடைபெறுகின்றது. 


அந்த நிகழ்விற்காக  பாக்கியாவிற்காக இனியா வெகுநேரம் காத்திட்டே இருக்கின்றார்.ஆனால் பாக்கியா வரவே இல்லை. சிறிது நேரத்தின் பின்னர் தாமதமாக பாக்கியா அந்த பாராட்டு விழாவிற்கு வருகின்றார். அவரை கண்டதும் இனியா "என்னை விட உனக்கு பிசினஸ் தானே முக்கியம், நீ எங்கிட்டப் பேசாதே" எனக்கூறிக் கோபத்தில் கத்துகின்றார். இதனைக் கேட்டதும் பாக்கியா கண் கலங்கி அழுகின்றார். 


இதுகுறித்த ப்ரோமோ வீடியோவினைப் பார்த்த ரசிகர்கள் இனியாவைத் திட்டித் தீர்த்து வருகின்றனர். ஏனெனில் இனியாவைப் பற்றி யோசிச்சு கொண்டிருக்கையில் காண்ட்ராக் எடுத்த அந்த சமையல் சொதப்பியமையினால் அங்கு ஏற்பட்ட ஒரு சில குளறுபடிகளினால் பாக்கியா மற்றும் மற்ற பெண்களை பிடித்து அடைத்து வைத்துவிடுகின்றனர்.

இதன் காரணமாகத் தான் பாக்கியாவால் அந்தப் பாராட்டு விழாவுக்கு குறித்த நேரத்திற்கு வர முடியாமல் போனது. இது தெரியாமல் பாக்கியாவை வார்த்தைகளால் காயப்படுத்திய இனியாவை நெட்டிசன்கள் 'பச்சோந்தி' எனக் கூறிக் கண்டபாட்டிற்குத் திட்டி வருகின்றனர்.


Advertisement

Advertisement