• Jul 24 2025

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வரப்போகும் புதுப் பிரச்னை- ட்விஸ்ட் ப்ரமோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இந்த சீரியல் அண்ணன் தம்பிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடர்.முழுக்க முழுக்க தமிழிலேயே உருவாக்கப்பட்டு எடுக்கப்படும் இந்த தொடர் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றது.

இவர்களின் கூட்டு குடும்பத்தை போலவே கிராமபுறங்களில் இப்போதும் பலர் வாழ்ந்து வருகிறார்கள்.வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் இப்போது ஒரு தம்பி பிரிந்து தனியாக வாழும் டிராக் போல காட்சிகள் அமைக்கப்படுகின்றது.

இதில் நடித்து வரும் முல்லை வெளியேறப்போவதாக கடந்த சில தினங்களாக செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால் அதை அதிகாரபூர்வமாக அவர்கள் அறிவிக்கவில்லை.



இந்நிலையில் தற்போது அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. மேலும் அதில் அவர்கள் தங்கி இருக்கும் பூர்வீக வீட்டை விற்க முடிவு செய்கிறார் மூர்த்தி. அதை மற்றவர்களும் ஒப்புக்கொள்கின்றனர்.



மீனாவின் அப்பா வந்து தானே அந்த வீட்டை பணம் கொடுத்து வாங்கிக்கொள்வதாக கூறுகிறார் . இதனால் இனி என்னவெல்லம் பிரச்சனை நடக்குமோ?  என்று பொறுதிருத்து பார்க்க வேண்டும்.



Advertisement

Advertisement