• Jul 23 2025

கேரளாவுக்கு டூருக்கு போன இனியாவுக்கு வந்த புதுப் பிரச்சினை- பாக்கியா எடுத்த முடிவு- Baakiyalakshmi Promo

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் மயூ வயதுக்கு வந்து விட்டதால் இனியாவுடன் கேரளா டூருக்கு பாக்கியா,ஈஸ்வரி,இனியா ஆகிய மூவரும் சென்றுள்ளனர்.

இப்போது இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகியுள்ளது. அதில் இனியா ஈஸ்வரிக்கும் செல்விக்கும் நடுவில் இருந்து வருவது கம்பர்ட்டபிளாக இல்லை என்று சொல்ல,அதற்கு செல்வி அப்போ நான் கீழ இறங்கி ஓடி வரட்டுமா என்று கேட்கின்றார். அதற்கு ஈஸ்வரி இந்த வாய்க்கு மட்டும் குறை இல்லை என்கின்றார்.


தொடர்ந்து கார் ஓட்டிட்டு வரும் ட்ரைவர் தன்னுடைய அப்பாவுக்கு அக்ஷிடன்ட் ஆகிவிட்டதால் தான் போகின்றேன் என்று கிளம்பி போக பாக்கியா என்ன செய்வதென்று தெரியாமல் பழனிச்சாமிக்கு போன் பண்ணுகின்றார். அப்போது பழனிச்சாமி உங்களுக்கு தான் ட்ரைவிங் தெரியுமே எடுத்து ஓட்ட வேண்டியது தானே என்கின்றார்.இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement