• Jul 25 2025

நான் எத்தனை கிஸ் கொடுத்திருக்கேன் ஒன்னே ஒன்னு கொடுடா- செல்லப்பிராணி நைக்கிடம் கெஞ்சிய கீர்த்தி சுரேஷ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தயாரிப்பாளரும், நடிகருமான ஜி.சுரேஷ்குமாருக்கும், நடிகை மேனகாவுக்கும் பிறந்தவர் கீர்த்தி சுரேஷ். திரைக்குடும்பத்தை சேர்ந்ததால் இவரும் திரைத்துறையில் நுழைந்தார்.  ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் பட்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டார்.அதிலும் இவர்  நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவான மகாநடிகை படத்தில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டையும் பெற்றார்.


 அதுமட்டுமின்றி அந்தப் படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார் கீர்த்தி.இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் கிஸ் கேட்கும் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. தசரா படப்பிடிப்பின்போது தனது கேரவனுக்குள் இருக்கும் கீர்த்தி சுரேஷ் தனது செல்லப்பிராணியான நைக் நாயிடம் விளையாடிக்கொண்டிருக்கிறார்.


 அந்த நாயை பிடித்து, உனக்கு நான் எத்தனை கிஸ் கொடுத்திருக்கிறேன். எனக்கு ஒன்னே ஒன்னு கொடுடா என கெஞ்சுகிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ் தமிழில் தற்போது மாமன்னன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement