• Jul 25 2025

வாரிசு வரவில்லையென்றால் தமிழ் நாட்டில் எந்த படமும் ஓடாது - விஜய்க்காக களமிறங்கிய சீமான்

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில்  உருவாகியிருக்கிறது.


மேலும் பொங்கலுக்கு இப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அன்றைய தினம் ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படவிருக்கிறது. எனவே நேரடி தெலுங்கு படங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுமென தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது. 


இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “விழாக்காலங்களில் நேரடித்தெலுங்குத் திரைப்படங்களுக்கு மட்டுமே ஆந்திராவில் முன்னுரிமை அளிக்கப்படும் எனும் தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. 


மேலும் எண்ணற்ற தெலுங்குத்திரைப்படங்கள் தமிழகத்தில் எவ்விதத் தடையுமின்றி வெளியாகிக் கொண்டிருக்கிற நிலையில், தமிழ்த்திரைப்படங்கள் வெளியாவதற்குக் கெடுபிடி விதித்திருக்கும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவு மிகத்தவறானது என கூறிஉள்ளார்.


அதுமட்டுமல்லாமல்  தமிழ்த்திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிரான தெலுங்குத்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் இம்முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். 


மேலும் அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், தெலுங்குத்திரைப்படங்களைத் தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என ” என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement