• Jul 25 2025

பிக்பாஸ் டைட்டிலுக்கு எந்த use ம் இல்லையா..? ஆரிக்கு என்னாச்சு..? மற்றவர்கள் நிலை என்ன.. குமுறும் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் பிக்பாஸ் சீசன் 4இல் கலந்து கொண்டு டைட்டிலை வென்றவர் தான் ஆரி. இவர் சக போட்டியாளர்கள் எல்லோரிடமும் கண்டிப்பாக இருந்தாலும் வெளியே இவருக்கு பெரிய நல்ல பெயர் இருந்தது. அத்தோடு பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர் கூட இவரை பார்த்த போது நன்றாக ஆடுகிறீர்கள் தம்பி என்று பாராட்டும் அளவிற்கு இவரின் ஆட்டம் அந்த சீசனில் மிகவும் சிறப்பாக இருந்தது.


இந்த நிலையில் பிக்பாஸை தொடர்ந்து ஆரி சினிமாவில் பெரிய ரவுண்டு வருவார் என்று ரசிகர்கள் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியே வந்த ஆரி படங்களில் நடிக்க நிறைய கட்டுப்பாடுகளை இயக்குநர்களுக்கு விதித்து இருக்கிறார். 

அதாவது கதையில் நிறைய மாற்றங்களை சொல்லி இருக்கிறார். இப்படித்தான் காட்சிகள் இருக்க வேண்டும், இப்படித்தான் வசனம் இருக்க வேண்டும், கதையில் இதை எல்லாம் மாற்றுங்கள் என்றெல்லாம் நிறைய அறிவுரைகளை சொல்லி அவர்களிடம் திணித்து இருக்கிறாராம். 


இவ்வாறு அவரைத் தேடி வந்த எந்த கதையையும் அவர் மாற்றம் சொல்லாமல் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. இதன் காரணமாக அவரை இயக்குநர்கள் அணுகுவதை அப்படியே குறைத்துக்கொண்டு உள்ளனர். அத்தோடு அவரைத் தேடி வந்த கதைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி உள்ளன. இதனால் அவருக்கு ஒரு கட்டத்திற்கு மேல் கதையே இல்லை என்ற நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து தற்போதுதான் ஒரு படத்தில் அவர் கமிட் ஆகி இருக்கிறாராம். அந்தவகையில் இளம் இயக்குநர் ஒருவரின் படத்தில் அவர் நடித்துக்கொண்டு இருப்பதாக கூறப்படுகின்றார். அதை தவிர அவரிடம் வேறு படம் எதுவும் இல்லை. 


இவ்வாறாக பிக்பாஸ் சீசனில் வெற்றிபெற்ற ஓவியாவும் ஆரியைப் போலவே அதன்பின் அப்படியே காணாமல் போய்விட்டார். ரித்விகா பெரிதாக படங்களில் நடிப்பது இல்லை. ராஜுவும் விஜய் டிவி நிகழ்ச்சிகளை தவிர பெரிதாக எதிலும் ஒன்றும் செய்வது இல்லை, அஸீமும் கெட்ட பெயர் எடுத்துவிட்டார்

ஆகவே மொத்தத்தில் பிக்பாஸ் சீசனில் வெற்றி பெற்ற யாருக்குமே சிறந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது கூறத்தக்கது.

Advertisement

Advertisement