• Jul 24 2025

எங்களின் வீடு எப்போதும் தமிழகம் தான்- விமான நிலையில் திடீரென சந்தித்துக் கொண்ட இளையராஜா மற்றும் ரகுமான்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80களில் இருந்து மூத்த இசையமைப்பாளராகவும் முக்கிய இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் தான் இளையராஜா. இவரைப் போல தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் ஆஸ்கார் இசையமைப்பாளராக வலம் வருபவர் தான் ஏ.ஆர் ரகுமான்.

இவர்கள் இருவரும் சமீபகாலமாக அடிக்கடி சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் அண்மையில் டுபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கூட இருவரும் சந்தித்திருந்தனர். இதனை அடுத்து தற்பொழுது  ரஹ்மான் - இளையராஜா சந்திப்பு சென்னையில் நடந்துள்ளது. 


ஹங்கேரி புடாபெஸ்ட்டில் இருந்து இளையராஜாவும், அமெரிக்காவில் இருந்து ரஹ்மானும் தமிழகம் திரும்பிய போது விமான நிலையத்தில்  நடந்துள்ளது.இது தொடர்பான வீடியோவை வெளியிட்டு, "இருவரும் வெவ்வேறு கண்டத்தில் இருந்து திரும்பினாலும் எங்களின் வீடு எப்போதும் தமிழகம் தான்" என ரஹ்மான் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வைரலாகி வருகிறது.மேலும் ரகுமான் இசையமைத்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி அன்று நடக்கும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement