• Jul 26 2025

பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து வெளியேறிய முக்கிய நபர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடும் சீரியல்கள் தான் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ். 

சகோதர உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தற்பொழுது முல்லை- கதிர் வீட்டை விட்டு வெளியேறி புதிதாக ஹொட்டல் ஆரம்பித்து பிஸ்னஷை கவனித்து வருகின்றார். அத்தோடு பழைய படி எப்போது இவர்கள் இணைவார்கள் என அனைவரும் ஆவலாக உள்ளனர்.


அதே போல பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவுக்கு உண்மை அனைத்தும் தெரிந்தால் கோபி வீட்டை விட்டு சென்று விட்டதோடு கோபி ராதிகாவைத் திருமணம் செய்வாரா? அடுத்ததாக என்ன நடக்கும் என அறிய ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது இந்த இரண்டு சீரியல்களிலும் ஒரு முக்கிய நபரின் மாற்றம் நடந்துள்ளது. அதாவது இரண்டு சீரியல்களின் வசனம் எழுதுபர் மாற்றப்பட்டுள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு இனி சரவணன் என்பவரும், பாக்கியலட்சுமி தொடருக்கு பாரதி தம்பி என்பவரும் தான் இனி வசனம் எழுத இருக்கிறார்களாம்.


Advertisement

Advertisement