• Jul 24 2025

கர்ப்பை அசிங்கப்படுத்திய பாண்டி... கண்ணம்மாவுக்கு நேர்ந்த சோகம் – இன்றைய முழு எபிசோட் அப்டேட்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. மண்டபத்துக்குள் சமையல் வேலை பார்த்த கண்ணம்மா ஸ்வீட் செய்வதற்காக முந்திரி பாதாம் உள்ளிட்டவற்றை எடுக்க மணமகன் அறைக்குள் நுழைய அங்கிருந்து பாண்டி பாத்ரூமுக்குள் மறைந்து கொள்கிறான். பின்னர் கண்ணம்மா தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியே வந்த பின்னர்  சிறிது நேரம் கழித்து பாண்டி வெளியே வர இருவருக்கும் ஏதோ தவறான தொடர்பு இருப்பதாக ஊருக்குள் தகவல் பரவுகிறது.

இதனையடுத்து தாமரை ரேஷன் கடைக்கு சென்று விட்டால் அப்போது கண்ணம்மா வண்டியில் போக அங்கே இருந்தவர்கள் கண்ணம்மாவில் நடத்தி பற்றி தப்பாக பேச தாமரை வாய்க்கு வந்ததெல்லாம் பேசாதீங்க என் தங்கச்சி நெருப்பு மாதிரி கண்ணம்மாவுக்கு ஆதரவாக சண்டை இடுகின்றார்.

அடுத்து ஊர் முழுக்க கண்ணம்மா பற்றி தவறான பேச்சு பேச்சு வர பாண்டி ஊருக்குள் வந்து வண்டியை கண்ணம்மா வீட்டு முன்னாடி விட்டு விட்டு கோவிலுக்கு சென்று வர அதுவும் தவறாக பேசப்படுகிறது. அதன் பிறகு வேண்டும் என்றே கண்ணம்மா வீட்டு கதவை தட்ட ஹேமா திறக்க தண்ணீர் கேட்டு குடித்து விட்டு அங்கிருந்து கிளம்புகிறான்.

அதன் பின்னர் கண்ணம்மா மசாலா பாக்கெட் கடைக்கு டெலிவரி செய்ய சிறந்த அங்கு அவர்கள் மசாலா ஒன்னும் வேணாம் இங்கிருந்து கிளம்பு என திட்டி அனுப்புகின்றனர். இதனால் கண்ணம்மா ஏன் என்னாச்சு எல்லோரும் ஏன் இப்படி மசாலா வேணாம்னு சொல்லி அனுப்புறாங்க என தெரியாமல் முழிக்கின்றார்.

பிறகு ஆண்டி சரக்கு அடித்துக் கொண்டிருக்கும் போது அவரது நண்பர்கள் குரூப்பில் உங்களது கதை தான் வந்திருக்கிறது என பேச இன்னொரு நண்பர் கண்ணம்மா நைட்டோட நைட்டா இந்த ஊரை விட்டு ஓடிடுவா என பேச பாண்டி அப்படி ஓடக்கூடாது, ஒன்னு எனக்கு வப்பாட்டியா இந்த ஊருக்குள்ள இருக்கணும் இல்லன்னா அவ கண்ணீர் விட்டு கஷ்டப்படணும் என சொல்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகின்றது.





Advertisement

Advertisement