• Jul 25 2025

முதன்முறையாக தனது பிரேக் அப் பற்றி வெளிப்படையாக பேசிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் யாரும் எதிர்பாராத விதமாக ஒற்றுமையாக இருந்த அண்ணன் தம்பிகள் பிரிந்து விட்டனர். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிய ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றனர்.

இப்படியான நிலையில் இந்த சீரியலில் முல்லையாக நடித்து வரும் லாவண்யா பிரபல சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். அந்த விடயம் தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.


அதில் அவர் நாங்க சின்ன வயசில இருக்கும்போது சீரியல் பார்க்க எல்லாம் வீட்டில அனுமதிக்க மாட்டாங்க. ஆனால் இப்போ உள்ள குழந்தைகள் சீரியல் நல்லாவே பார்க்கிறாங்க. என்னை ஒரு சின்னப் பையன் அடையாளம் கண்டு பிடிச்சு ஆட்டோகிராப் கேட்டது எல்லாம் ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு என்றார்.


மேலும் நான் ஒரு பையனை பாங்ல வேலை செய்யும் போது லவ் பண்ணினேன். ஆனால் நான் மீடியாவுக்குள்ள வந்ததுக்கு பிறகு நமக்குள்ள ஒரு பிரிவு வந்திருச்சு நம்மளோட கெரியரை முன்னேற்றுவதற்கு கண்டிப்பாக பிரேக் அப் பண்ணனும் என்றால் என்ன பண்றது பண்ணிட்டேன். கஷ்டமாத் தான் இருந்திச்ச ஒன்றை இழந்தால் தான் இன்னொன்றை பெற முடிவும் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement