• Jul 26 2025

'பொன்னியின் செல்வன் 2' மூன்றாம் நாள் வசூல் நிலவரம்... எத்தனை கோடி தெரியுமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட வரலாற்றுப் படமாக வெளிவந்த திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. அதாவது விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்த இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்து மாபெரும் சாதனை படைத்தது.


இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ள அதன் இரண்டாம் பாகம் அந்த வசூல் சாதனையை முறியடிக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் பலரிடையேயும் எழுந்துள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 வெளிவந்து  தற்போது மூன்று நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை எவ்வளவு இதுவரை செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 


அந்தவகையில் இப்படம் கடந்த மூன்று நாட்களில் மட்டுமே ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது எனக் கூறப்படுகின்றது. எனவே போகப் போக இதன் வசூல் இன்னமும் அதிகரித்து முதல் பாகத்தின் வசூலை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement