• Jul 26 2025

15நாட்களைத் தொட்ட 'பொன்னியின் செல்வன்-2'... இதுவரை செய்த வசூல் எத்தனை கோடி தெரியுமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி கடந்தாண்டு வெளியாகி 500கோடி வசூலை வாரிக் குவித்த ஒரு வரலாற்றுக் கதையம்சம் கொண்ட திரைப்படம் தான் 'பொன்னியின் செல்வன்'. இந்தப் படத்தில் முன்னணி நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி உள்ளிட்டவர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில்  நடித்துள்ளனர்.


முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியானது. இப்படமானது ஓரளவிற்கு சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ள நிலையில்,கடந்த 28-ஆம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி தற்போது 15நாட்களைக் கடந்துள்ளது.


இந்நிலையில் இப்படம் இதுவரை மொத்தமாக 330 கோடி தான் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இருப்பினும் இந்த வசூல் முதல் பாகத்தை விட மிகவும் குறைவு தான். அதுமட்டுமல்லாது நாளுக்கு நாள் இந்த படத்தின் வசூல் குறைந்து கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement