• Jul 24 2025

பிரபல கிரிக்கெட் வீரரரைக் காதலித்த 'பொன்னியின் செல்வன்' பட நடிகை... அவரே கூறிய உண்மை..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தில்  'பூங்குழலி' என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. மலையாள நடிகையான இவர் 'ஆக்ஷன்' என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமாகினார்.

இதனைத் தொடர்ந்து 'ஜகமே தந்திரம், கேப்டன், கார்கி' போன்ற பல படங்களிலும் நடித்திருக்கின்றார். இருப்பினும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவருடைய தோற்றம் தான் ரசிகர்களை ஈர்க்கும் அளவிற்கு வெகுவாக கவர்ந்திருக்கின்றது. அதுமட்டுமல்லாது இவரின் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் ஐஸ்வர்யா லட்சுமி சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பல விடயங்களை பகிர்ந்திருக்கின்றார். அதாவது "நான் பிறந்தபோது என் அப்பா எனக்கு ஸ்ரீ லட்சுமி என்று பெயர் வைத்தார். ஆனால் அம்மா ஐஸ்வர்யா என்று பெயர் வைத்தார். கடைசியில் ஐஸ்வர்யா லட்சுமி ஆனேன். 

எனக்கு லட்சிய கதாபாத்திரம் என்று எதுவும் இல்லை. ஆனால் வில்லி வேடங்களில் நடிக்க சுத்தமாக பிடிக்காது. அதனால் எப்போதுமே வில்லியாக நடிக்க கூடாது என்று முடிவு செய்து இருக்கிறேன். மேலும் காஞ்சிபுரம் பட்டு புடவைகள் கேரளா சம்பிரதாய புடவைகள் என்றால் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அதனால் ஓய்வாக இருக்கும் போதெல்லாம் புடவைகளைக் கட்டிக் கொண்டு போட்டோ எடுத்துக் கொள்வேன். 


அதுமட்டுமல்லாது அபிஷேக் பச்சன் மற்றும் விஜய் படங்கள் அதிகமாக பார்ப்பேன். கிரிக்கெட் விளையாட்டு வீரர் யுவராஜ் சிங் என்றால் எனக்கு மிகவும் இஷ்டம். ஆறாம் வகுப்பில் தொடங்கி பன்னிரெண்டாம் வகுப்பு வரை அவரை மனதிற்குள் காதலித்து கொண்டே இருந்தேன். ஆனால் இப்போது கிரிக்கெட் பார்க்க நேரமே இல்லை'' என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி.

Advertisement

Advertisement