• Jul 25 2025

மீண்டும் வசூலில் மண்ணைக் கவ்விய 'PS-2'... 7நாட்களைக் கடந்தும் வெறும் இத்தனை கோடி தானா..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலுக்கென்று தலைமுறைகள் கடந்தும் பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கினார் மணிரத்னம். 


அந்தவகையில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன் எனப் பலரும் நடித்த 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.


இதனையடுத்து சமீபத்தில் வெளியாகியுள்ள அதன் இரண்டாம் பாகம் அந்த வசூல் சாதனையை முறியடிக்குமா என்ற கேள்வி பலரிடையேயும் எழுந்துள்ளது. அந்தவகையில் முதல் 4 நாட்கள் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், 4 நாட்களுக்கு பின் வசூல் குறைய தொடங்கியது.


இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 வெளிவந்து தற்போது ஏழு நாட்கள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், இப்படம் வெளிவந்து 7 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை ரூ. 235 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது. அத்தோடு தமிழகத்தில் மட்டுமே ரூ. 85 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் முதல் பாகத்துடன் ஒப்பிடும் போது இது மிகக்குறைவான வசூல் ஆகும்.

Advertisement

Advertisement