• Jul 25 2025

விரைவில் விவாகரத்து..? ரச்சிதா எடுக்கப்போகும் அதிரடி முடிவு... நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் வெளியிட்ட பதிவு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சரவணன் மீனாட்சி என்னும் சீரியல் மூலம் பிரபல்யமான ரச்சிதாவும், சீரியல் நடிகர் தினேஷும் சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின் நன்றாக மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வந்த ரச்சிதா, சில கருத்து வேறுபாடுகள் காரணமாக கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்.


இந்நிலையில் நேற்றைய தினம் சென்னை மாங்காடு மகளிர் காவல் நிலையத்தில் தினேஷ் கார்த்திக் மீது புகார் ஒன்றினை ரச்சிதா அளித்திருந்தார். அதாவது சில நாட்களாக தினேஷ் தனக்கு ஆபாசமாக செல்போனில் மெசேஜ் செய்து வருவதாகவும் அடிக்கடி தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து வருவதாகவும் அப்புகார் மூலமாக கூறியிருந்தார். காவல்நிலையத்தில் ஆஜரான தினேஷ், "விவாகரத்து பெற நீதிமன்றத்திற்கு போகலாம்" என்று ரச்சிதாவிடம் கூறிவிட்டு சென்றுள்ளாராம். 


இதனையடுத்து தற்போது கண்ணாடி துகல்கள் உடைந்த படி இருக்கும் ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை பதிவிட்டுள்ளார் நடிகை ரச்சிதா. அதில் "வலுவாக இருப்பது மட்டுமே எஞ்சியிருக்கும் ஒரே வழி" அதில் குறிப்பிட்டுள்ளார். இதனை வைத்து பார்க்கும் போது ரச்சிதா தினேஷை விட்டு நிரந்தரமாக பிரிய முடிவெடுத்துள்ளமை தெரிகிறது. அதுமட்டுமல்லாது நீதிமன்றில் கூட ரச்சிதா இனிமேல் சேர்ந்து வாழப்போவதில்லை எனக் கூறியமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement