• Jul 25 2025

இரண்டே படத்தில் பறிபோன திரைவாழ்க்கை-வாய்ப்பில்லாமல் ஆளேமாறிப்போன ராதா மகள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80களில் இருந்து முன்னணி நடிகையாக  தனக்கான இடத்தை பிடித்து கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ராதா நாயர். இயக்குநர் இமயம் பாரதிராஜாவால் அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகையாக திகழ்ந்து அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு, மொழிப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்தார்.


இதனையடுத்து 1991ல் ராஜசேகரன் என்பவரை திருமணம் செய்து கார்த்திகா நாயர், துளசி நாயர் என்ற இரு பெண்களை பெற்றெடுத்தார். திரையுலகில் இருந்து விலகிய ராதா, தன் இரு மகள்களையும் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.


மூத்த மகள் ஒருசில வெற்றிப்படங்களை நடித்து வந்த நிலையில் இரண்டாம் மகள் துளசியை மணிரத்னமின் கடல் படத்தில் நடிக்க வைத்தார்.இப் படம் ஓரளவிற்கு வரவேற்பு பெற்றாலும் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது.


இதன்பின் ஜீவாவுடன் யான் படத்தில் நடித்தும் அப்படமும் தோல்வியடைந்தது. 14 வயதில் நடிகையாக அறிமுகமாகிய துளசி நாயர் அதன்பின் படிப்பில் கவனம் செலுத்த வெளிநாட்டில் செட்டிலாகினார்.


எனினும் தற்போது 25 வயதாகவும் நடிகை துளசி நாயர் உடல் எடையை அதிகரித்து குண்டாகி ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். சமீபத்தில் கார்த்திகா நாயரின் பிறந்தநாள் பார்ட்டியிலும் துளசியின் 25வது பிறந்தநாளில் வெளிநாட்டில் நடைபெற்ற பார்ட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் துளசி நாயர். இதை பார்த்த நெட்டிசன்கள் அவரை பார்த்து ஷாக்காகி வருகிறார்கள்.



Advertisement

Advertisement