• Jul 25 2025

ஹாஸ்பிட்டலில் மாதுரியிடம் சிக்கிக் கொண்ட ராம்- அதிர்ச்சியில் உறைந்த குமார்- வெளியாகிய ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சீரியல் தான் கண்ணே கலைமானே. இந்த சீரியல் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கின்றது.இந்த சீரியலில் தற்பொழுது பானு தான் தன்னுடைய மனைவி என்ற விடயம் ராமுக்கு தெரிந்து விட்டது.

இதனால் பானுவுக்கு தேவையானவற்றை எல்லாம் அவரது அண்ணா அண்ணி மூலம் ராம் தான் செய்து வருகின்றார். மேலும் தமிழுக்கும் ராம் தான் தன்னுடைய அப்பா என்றும் தெரிந்து விட்டது. இருப்பினும் அதனை பானுவிடம் சொல்லாமல் ரகசியம் காத்து வருகின்றார்.

இப்படியான நிலையில் பானுவும் கண் ஆபிரேஷன் செய்ய சம்மதித்து விட்டார். இதனால் ராம் மாதுரியின் குடும்பத்தினருக்கு தெரியாமல் பானுவுக்கு கண் ஆபிஷேசன் நடக்கும் ஹாஸ்பிட்டலுக்கு சென்றுள்ளார்.

இந்த விஷயம் மாதுரியின் மாமாவுக்கு தெரிந்ததால் அவர் மாதுரியின் அப்பாவுக்கு சொல்ல மாதுரியின் குடும்பத்தினர் ஹாஸ்பிட்டலுக்குச் செல்கின்றனர். அங்கே ராமின் மேனேஜர் குமாரைப் பார்த்ததோடு ராம் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement