• Jul 25 2025

வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கும் கதிர்- குணசேகரன் மீது கோபத்தில் இருக்கும் அவரது மகன்- Ethirneechal - Promo

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதாவது குணசேகரன் வீட்டு மருமகள்கள் எல்லோரும் காரில் போகின்றனர். அப்போது ஜான்சி ராணியும் அவர்களுடன் போகின்றார். ஜான்சி ராணி தண்ணீர் குடிக்கும் போததலை வெளியில் துாக்கிப் போட ரேணுகா, எதுக்கு ரோட்டில் போடுகின்றாய் என்று கேட்கின்றார்.

அப்போது ஜான்சி ராணி எங்கடி போடச் சொல்லுற எனத் திட்டுகின்றார். தொடர்ந்து கதிர் யார் கூடவோ பேசிட்டு இருக்கும் போது,கரிகாலன் வந்து லேட் ஆனால் பிளான் மாறிடும் வாங்க என்று சொல்லி அழைக்கின்றார். தொடர்ந்து குணசேகரன் ஈஸ்வரி வளர்த்த மகனாச்சே அதான் இப்படி இருக்கிறான் என்று தன்னுடைய மகனை சொல்கின்றார்.இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement