• Jul 25 2025

கல்யாணம் பண்ணி வச்சிட்டு இப்படிப் பண்ணிட்டாங்களே- பாக்கியா மீது குற்றம் சாட்டிய ரித்திகா- தீயாய்ப் பரவும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல்யமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ரி ஆர் பியிலும் முன்னணியில் நிற்கின்றது.இந்த தொடரில் தற்போது எழில் - அமிர்தா திருமணம் நடந்து முடிந்து இருக்கிறது. மறுபுறம் வீட்டை காலி செய்ய சொல்லும் கோபியை எப்படி சமாளிக்க போகிறோம் என இருக்கிறார் பாக்கியா.

அந்த நேரத்தில் கோபியின் அப்பா அவரது மொத்த சொத்தையும் எழுதி கொடுத்து விடுவதாக கூறி, அதற்கு பதிலாக வீட்டை மட்டும் கொடுத்துவிடும்படி கேட்கிறார். கோபியும் அதற்கு ஒப்புக்கொள்கிறார்.


அடுத்து வரும் நாட்களில் பாக்கியா மற்றும் அமிர்தா இணைந்து ஒரு திருமணத்திற்கு சமையல் காண்ட்ராக்ட் எடுத்து செய்வது போல காட்சிகள் வருகிறது. அதன் ஷூட்டிங்கில் ஒரு வீடியோவை எடுத்து வெளியிட்டு இருக்கிறார் நடிகை ரித்திகா.

'என்னை அவர் மகனுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு, சமையல் வேலைக்கு ஆள் எடுத்துவிட்டார்' என காமெடியாக பாக்கியா மீது புகார் கூறி இருக்கிறார்.இந்த வீடியோவைப் பார்த்த பல ரசிகர்கள் அடுத்த வாரம் இன்னும் பரபரப்பாக பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகும் என்று நம்புகின்றனர்.


Advertisement

Advertisement