• Jul 25 2025

மீண்டும் இயக்குநராகும் சசிகுமார்…ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் அப்டேட்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தனக்கான இடத்தை பிடித்தவர் சசிகுமார்.இவர் மீண்டும் திரைப்படம் இயக்கவுள்ளார் என  இயக்குநர் சசிகுமார் தெரிவித்துள்ளார். பிரபல இயக்குநரான சசிகுமார் நடிப்பில் ‘காரி’ திரைப்படம் உருவாகி வருகிறது. ஹேமந்த் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகின்றது.

மேலும்  இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக பார்வதி அருண் நடித்துள்ளார். அத்தோடு  இந்த படத்தில் சக்ரவர்த்தி, பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டி இமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார்.அத்தோடு  கிராமத்து கதைக்களத்தில் ஆக்ஷன் கலந்து உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 25-ஆம் திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறுஇருக்கையில்  இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய சசிகுமார், அடுத்த ஆண்டு மீண்டும் படம் இயக்குகிறேன். அனைத்தும் உறுதியாகிவிட்டது. விரைவில் அறிவிக்கிறேன் என்று கூறியுள்ளார். சசிகுமார் மீண்டும் படம் இயக்கவுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement