• Jul 25 2025

பயத்தில் காருக்குள் கத்திய வெண்ணிலா... வாயைப் பொத்திய சூர்யா... அட்டகாசமான 'காற்றுக்கென்ன வேலி' ப்ரோமோ வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரெட் லிஸ்டில் இணைந்துள்ள 'காற்றுக்கென்ன வேலி' தொடர் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது இந்த சீரியல் கல்லூரி கதைக்களத்தோடு அமைந்திருந்தாலும் காதல், சண்டை என வாழ்க்கையின் முக்கிய பரிமாணங்களை இளமை ததும்ப காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் இளைஞர்கள் அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர்.


இந்நிலையில் இந்த சீரியலின் உடைய இன்றைய ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் வெண்ணிலா மற்றும் சூர்யா செல்லும் காரைக் கும்பலொன்று விட்டுத் துரத்துகின்றது. இதனால் வெண்ணிலா பயப்பிடுகின்றார். அவர்களின் கார் வைக்கோல் கும்பிக்குள் நுழைகின்றது.


அப்போது சூர்யா வெண்ணிலாவை பார்த்து "ப்ரதர் வந்திட்டார் போல அதுதான் இந்து உஸ்ஸு உஸ்ஸு" எனக் கிண்டலாக கூறுகின்றார். பதிலிற்கு வெண்ணிலா "அண்ணனா" எனக் கேட்கின்றார். அதற்கு சூர்யா "ஆமா பாம்பு ப்ரோ" என்கிறார்.

அப்போது பாம்பு ஒன்று சீட்டில் உட்கார்ந்திருக்கின்றது. அதைப் பார்த்ததும் வெண்ணிலா பாம்பு எனக் கத்துகின்றார். உடனே சூர்யா வெண்ணிலாவின் வாயைப் பொத்துகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement