• Jul 24 2025

பொன்னியின் செல்வன் செட்டிலிருந்து வைரலாகும் செல்ஃபி- த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் சும்மா கலக்கிறாங்களே

stella / 2 years ago

Advertisement

Listen News!

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் கல்கியின் புகழ் பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம தான் பொன்னியின் செல்வன்.2 பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம்  செம்டெம்பர் மாதம் 30ம் திகதி வெளியாகவுள்ளது.

சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான இப்படம் உருவாகி உள்ளது.


ஏராளமான நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கூட அண்மையில் நடந்தது. இதில் விக்ரம் கார்த்தி ஜெயம் ரவி த்ரிஷா ஐஸ்வர்யா ராய் என நட்சத்திர பட்டாளங்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கபட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் செல்பி எடுத்து கொண்டுள்ளனர்.இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகியும் வருகின்றது.


மேலும் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி கேரளாவிற்கு பொன்னியின் செல்வன் படக்குழு சென்று இருந்தது அங்கு எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement